மட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்ற புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, சந்திவெளியில் இன்று (24) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மணல்சேனை நிருபர் - நடனசபேசன் சாமித்தம்பி)


Add new comment

Or log in with...