Saturday, October 24, 2020 - 9:48am
நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆங்காங்கே பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரித்தல் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.
இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
Add new comment