ஹட்டன், தலவாக்கலை மீன் விற்பனை நிலையங்கள் பூட்டு

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு வேலை செய்தவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்களை ஹட்டன் நகர சபையினரும் பொலிஸாரும் இணைந்து மூடியுள்ள அதேவேளை,  தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட மீன் விற்பனை நிலையங்களும் இன்று (23) மூடப்பட்டுள்ளன.

பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்த டிக்கோயா தரவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் டிக்கோயா தரவளை வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், குறித்த இளைஞன் ஒரு மாத காலமாக டிக்கோயா தரவளை வீட்டிற்கு வரவில்லை என, சுகாதார பரிசோதர்கள் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...