அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு
புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் வரைவு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 09 நிபுணர்களை கொண்ட குழு ஈடுபட்டு வருகின்றது.
இந்த குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமை தாங்குகிறார். உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் காமினி மாரப்பன, மனோஹரா டி சில்வா, சஞ்சீவ ஜெயவர்த்தன, சமந்த ரத்வத்த, பேராசிரியர் நஸீமா கமருதீன், பேராசிரியர் வசந்த செனவிரட்ன, கலாநிதி ஏ.சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் செயற்படுகின்றனர்.
Add new comment