களுத்துறையில், இரு பிரதேச செயலகங்களில் 5 கிராமங்கள் தனிமைப்படுத்தல்

களுத்துறையில், இரு பிரதேச செயலகங்களில் 5 கிராமங்கள் தனிமைப்படுத்தல்-Gampaha District Agalawatta PS-Palindanuwara PS Declared as Isolated Area

உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மறுஅறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,
- அகலவத்தை பிரதேச செயலகம்:

  • கொரக்கொட
  • பேரகம
  • தாபிலிகொட
  • கெகுலந்தலந்தல வடக்கு

- பாலிந்தநுவர பிரதேச செயலகம்:

  • பெல்லன

ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...