புர்கினாவில் 3 கிராமங்களில் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

ஜிஹாதிக்களின் மையமாக மாறியுள்ள வடக்கு புர்கினா பாசோவில் மூன்று கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

செனோ மாகாணத்தில் மூன்று கிராமங்களே கடந்த புதன்கிழமை ஜிஹாதிக்களால் தாக்கப்பட்டிருப்பதாக ஆளுநகரின் பேச்சாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் கிராமங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாக உள்ள புர்கினா பாசோ கடந்த 2015இல் அண்டை நாடான மாலியில் இருந்து வந்த ஜிஹாதிக்களின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருகிறது. இந்த ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு பலரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்திலும் இடம்பெயர்ந்தவர்கள் பயணித்த வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...