மின்தூக்கி அறுந்து வீழ்ந்து இருவர் பலி

கண்டி, லேவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் மின்தூக்கி (லிப்ட்) அறுந்து வீழ்ந்ததில்,  இருவர்  உயிரிழந்துள்ளனர்.

லேவெல்ல தர்மாசோக மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலையின் மின்தூக்கியே இன்று (16) காலை அறுந்து வீழ்ந்துள்ளது.

குறித்த இரு நபர்களும் 50 கிலோகிராம் எடையுள்ள ஐந்து சீமெந்து பொதிகளையும் ஏற்றிச் செல்லும்போதே மின்தூக்கி அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் 57 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, 55 வயதான மற்றைய நபர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களாவர்.

(கண்டி தினகரன் சுழற்சி நிருபர்-இராசையா மகேஸ்வரன்)

 


Add new comment

Or log in with...