Sunday, October 4, 2020 - 12:24pm
வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புத் தொடர்பான பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் அல்லது, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
Add new comment