மன்னாரில் 1,024 கி.கி. மஞ்சளுடன் லொறி மீட்பு

 - உரிமையாளரை தேடி வலை வீச்சு

மன்னாரில் 1,024 கிலோ 245 கிராம் நிறையுடைய மஞ்சள் ஏற்றிய லொறியொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மஞ்சள் ஏற்றிய லொறியொன்று, மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகர்சல் பிரதேசத்தில் காணப்படுவதாக, பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, நேற்று (26) மாலை குறித்த லொறி கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த லொறியுடன் 29 பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மஞ்சளை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு, அச்சந்தேகநபரை தேடி பேசாலை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 


Add new comment

Or log in with...