Wednesday, September 23, 2020 - 3:19pm
நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தரம் 01, 06, 11 ஆகிய தரங்கள் தவிர்ந்த, ஏனைய இடைப்பட்ட தரங்களில் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Add new comment