ஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தற்காலிகமாக குறித்த தூதரகம் மூடப்பட்டுள்ளதோடு, தூதரக சேவைகளை மின்னஞ்சல் மூலமாக பெற முடியும் என, கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...