Wednesday, September 16, 2020 - 10:23am
திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் சேர்ந்த சுமீர என அழைக்கப்படும் சுமீர மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனையில் ஹெரோயினுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, இச்சந்தேகநபரிடமிருந்து ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ஆமி சம்பத்தினுடைய உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment