லொறி - ஆட்டோ விபத்து; சாரதி உட்பட மூவர் பலி

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுரும்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் இன்று (16) அதிகாலை இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை பின்னால் வந்த லொறி மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியும் அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.

மண்டாவல, நெதுன்கொல்ல பிரதேசங்களைச் சேர்ந்த 48, 53, 57 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக அவிசாவளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...