வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் நாளை (14) முதல் மீண்டும் அமுல்படுத்துவதற்கு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நான்கு வீதிகள் ஊடாக குறித்த வீதி ஒழுங்கை சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின்  பணிப்பாளர்  இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கை சட்டத்தை பின்பற்றாத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...