ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28ஆவது முறையாக இடம்பெற்ற செயற்பாட்டு உணவு வகைகளுக்கான சர்வதேசக் கருத்தரங்கில், பெட்னா உற்பத்திகளின் மூன்று தயாரிப்புகள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஷேப் அப் டீ, ஈஸீ டீ மற்றும் இமியுனி டீ ஆகிய பெட்னாவின் மூன்று உற்பத்திகள் தொடர்பாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் செயல்முறை விஞ்ஞான பீடத்தினால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீவிர ஆய்வு தொடர்பான விடயங்கள், ஐக்கிய அமெரிக்காவில் 28வது தடவையாக இடம்பெற்ற பயன்பாட்டு உணவு வகைகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெட்னா நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு, ஆரோக்கியமான, மகிழ்ச்சி மிக்க, செயற்திறன் கொண்ட வாழ்க்கை முறையொன்றைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இயற்கையான உற்பத்திகளை பெற்றுக் கொடுத்து, ஆரோக்கியமான தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதில் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அதிக முக்கியத்துவத்தையும் பெற்றுக்கொடுக்கிறது. உணவு மற்றும் சுகாதாரக் கல்வி தொடர்பான நாட்டின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றான சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த தொடர் ஆராய்ச்சிகள் மூலம் பெட்னா ஆயுர்வேத உற்பத்திகளின் செயற்திறன், தரம் மற்றும் செழுமை ஆகியன மேலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட புஃட் அன்ட் நேச்சர் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமேந்திர சோமதுங்க, ‘சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் என்பனவற்றை தமது முக்கிய அம்சங்களாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்ற ரீதியில், பெட்னா, தனது வாடிக்கையாளர்கள் உட்கொள்ளும் ஒளடத தேநீரில் அவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் உள்ளடங்குகின்றனவா என்பதை எப்போதும் உறுதிப்படுத்துவதில் திடமாகவுள்ளது.
இதனால்தான், நாம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டை எப்போதும் கட்டாயப்படுத்தி வருகின்றோம். நாம் சரியான பாதையில் உள்ளோம் என்பதையும், சரியான வழிகாட்டல் எமக்குக் கிடைத்து வருகிறது என்பதும் அவற்றின் மூலம் எமது உற்பத்திகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பதும் இதன் மூலம் எமக்கு உறுதியாகிறது’ என்று கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ‘சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நடைமுறை விஞ்ஞான பீடமானது, இந்தத் துறையில் மிகவும் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும். பெட்னாவுடனான இவ்வாறன பல்வேறு ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்கள் கொண்டுள்ள அறிவு, திறமை மற்றும் அவர்களிடம் உள்ள சிறந்த ஆய்வுகூடங்கள் என்பன அவர்களை எமக்கு மிகவும் பொருத்தமான பங்காளிகளாக மாற்றியுள்ளது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெட்னா ஷேப் அப் டீ தொடர்பாக மேற்கொள்ளப்பட்;ட ஆராய்ச்சியின் போது, அதன் முக்கிய உள்ளடக்கங்களான, Garcenia carmbogia மற்றும் Camellia sinensis ஆகிய இரண்டு தாவரங்களும் hypolipidemic செயற்பாட்டைக் கொண்டுள்ளன. அவை உடல் பருமனடைவதைக் குறைக்கும் தன்மையைக் கொண்டனவாகும். ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டு காலமாக இந்த இரண்டு தாவரங்களும் உணவு தயாரிக்கும் போது பயன்படுத்தப்பட்டு வந்தவைகளாகும். அவற்றினால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை. (-)-hydroxycitric acid (HCA) ஆனது, Garcenia carmbogia வில் காணப்படுகின்றது. அதில் மேலும் catechins, caffeine மற்றும் flavonoids ஆகியன Camellia sinensis இல் காணப்படுகின்றன. இவையனைத்தும், உடல் பருமனடைவதைத் தடுக்கும் முக்கிய உள்ளடக்கங்களாகும். மேலும், இந்த இரண்டு தாவரங்களையும் உள்ளடக்கிய ஒரு உற்பத்தி, உடல் பருமனடைவதைக் குறைப்பதில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது, உடல் எடையைக் குறைக்கும் மிகச் சிறந்த உற்பத்தியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. பெட்னா ஷேப் அப் டீயின் முக்கிய இரண்டு உள்ளடக்கங்களான இவை, எந்தவிதமான பாதிப்புக்களும் இன்றி, சாதாரண கிறீன் டீ க்கு அதிகம் பெறுமதி சேர்க்கும் வகையில் செயற்படுகின்றன.
சப்ரகமுவ பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்
அதேபோன்று, பெட்னா ஈஸீ டீ மற்றும் இமியுனி டீ என்பனவற்றில் காணப்படும் ஒளடத உள்ளடக்கங்கள், அவற்றின் சிறப்பம்சங்களை பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஆயுர்வேத மருத்துவதில் வெளிப்படுத்தியுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் அவை மேலும் சிறந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பெட்னா ஈஸீ டீ ஆனது, பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்க ஒரு உற்பத்தியாக dysmenorrhea என்ற நிலைக்கு மருந்தாகப் பயன்படுத்த சிறந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் காணப்படும் வலி நிவாரணியாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் போது, ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட, பெட்னா ஈஸீ டீ பயன்படுத்திய குழுவில் இருந்தவர்களில் 97% ஆனவர்கள் இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு உதவுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் 87% ஆனவர்கள், அதனைப் பயன்படுத்திய பின்னர் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறைவடைவதை உணர்ந்துள்ளார்கள்.
பெட்னா இமியுனி டீ, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு உற்பத்தியாகும். பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிக்காக இது உள்வாங்கப்பட்டது. இதில் காணப்படும் மூலப்பொருட்களான கொத்தமல்லி, மஞ்சள், கருமிளகு, கறுவா, Piper longum, Zingiber officinale, Centella asiatica, Phylanthas embllica, Cassia angustifolia, Coscinium fenestratum, Tinospora cordifolia ஆகியன மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை பெற்றுக்கொடுக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய, புற்றுநோயைத் தடுக்கும், கிருமித் தாக்கங்களை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளன.
இந்த ஆராய்ச்சிகள் மூலம் பெட்னா உற்பத்திகளில் காணப்படும் சிறப்பு மற்றும் நலச்செழுமை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கையான உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது, மேலும் சிறப்பாகத் தெரிய வருகின்றது. இந்தப் பெறுபேறுகள் பிரசித்தி பெற்ற சர்வதேச ஒன்றுகூடல் ஒன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை பெட்னாவுக்கு அதன் நலச் செழுமையை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இலங்கையில் தயாரிக்கப்படும் ஒரு உற்பத்திக்கு இவ்வாறான வாய்ப்புக் கிடைப்பது மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும். பயன்பாட்டு உணவு வகைகள் தொடர்பான 28வது சர்வதேச கருத்தரங்கு 2020 ஓகஸ்ட் 28 மற்றும் 29 ஆந் திகதிகளில் இணையத்தளம் ஊடாக இடம்பெற்றன.
Add new comment