அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (03) காலை 7.00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நீர் வெட்டு அமுலில் இருப்பதோடு, புதுக்கடை (கொழும்பு 12), கொச்சிக்கடை மற்றும் கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (14), மோதறை, மட்டக்குளி, முகத்துவாரம் (கொழும்பு 15) ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோட்டை (கொழும்பு 01), மருதானை மற்றும் பஞ்சிகாவத்தை (கொழும்பு 10), புறக்கோட்டை (கொழும்பு 11) ஆகிய பகுதிகளில் நாளை காலை 7.00 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.(சு)
Add new comment