Monday, August 24, 2020 - 4:22pm
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று (24) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நபர்களை தடுத்து வைக்கும் பிரிவிற்கு அருகில் குழியொன்றை தோண்டி அதில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
Add new comment