இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற கன்னி அமர்வில், குழுக்களின் பிரதித் தலைவராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவாகியுள்ளார்.
குறித்த நியமனம் தொடர்பில் சபாயநாயகரினால் அறிவிக்கப்பட்டது.
இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், யாழ்ப்பாண மாவட்ட இணைப்புகுழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயர் முன்மொழியப்பட்டது.
அவரது பெயரை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வழிமொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து 9ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த அவர் 36,365 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment