வெகுசன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (13) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் தெரிவிக்கையில், இந்நாட்டினுள் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற ஊடக பாரம்பரியம் கட்டியெழுப்படும் என்றார்.
இந்நிகழ்வில் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் கலந்து கொண்டார்.
இதன்போது ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தார். 30 வருடகால யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அப்போதிருந்த அரசாங்கத்தில் ஊடக பேச்சாளராகவும்கெஹலிய ரம்புக்வெல்ல செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment