முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நீக்கக் கோரி  மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.

நேற்று காலை 8மணி தொடக்கம் நண்பகல் 12மணிவரை இவ் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்போது தமது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிய வாசகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் தொடர்பாக அவர்கள் கூறுகையில்,

இவ் வைத்தியசாலையில் மிக நீண்ட நாட்களாக நிலவிவரும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் பலதடவைகள் கோரியும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையிலேயே நாம் இன்று இப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

மருத்துவ சேவைப் பணிப்பாளருடன்  கலந்துரையாடியபோது 20.09.2019ஆம் ஆண்டு, குறைந்தது நான்கு உள்ளக பயிற்சிகளை  நிறைவு செய்து நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை மாற்று தீர்விற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்குமாறு யாழ்.போதன வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டு இன்றுவரை இந்த மருத்துவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இது விடயம் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றன.

இருந்தும்  நான்கு உள்ளக பயிற்சி நிறைவு பெற்ற நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்கும் வரை 21.07.2020  அன்று தொடக்கம் மருத்துவமனையின் அனைத்து பொது மருத்துவ சேவையினை நிறுத்தி தொழில் சங்க போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் தேர்தலின் பின்னரான காலத்தில் இதுவரையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வைத்தியர்கள் எவரையும் விடுவிக்கப்படாத நிலை தொடர்ந்து செல்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இறுதியாக உள்ளக பயிற்சி நிறைவு செய்த வைத்திய அணியில் இருந்து தகுதி பட்டியலில் கீழ் வரிசையில் உள்ள நான்கு வைத்தியர்களை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு தெளிவாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள போது அவர் இதுவரை விடுவிக்கவில்லை என்றனர்.

இதேவேளை வைத்தியர்களது இப் ​போராட்டத்தினால் வெ ளிநோயளர் பிரவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் இப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

ச.இராசரத்தினம்


Add new comment

Or log in with...