புத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்

புத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்-Rishad Bathiudeen Wishes-Ali Sabry Raheem From Puttalam-MNA Party-ACMC

- 33 வருடங்களின் பின் புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

புத்தளம் தொகுதியில், வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்-Rishad Bathiudeen Wishes-Ali Sabry Raheem From Puttalam-MNA Party-ACMC

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் மூலம், கடந்த 33 வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்ககது.


Add new comment

Or log in with...