- 61,248 பேர் விண்ணப்பம்
2019 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை, www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை விடைத்தாள் மீளாய்விற்காக 61,248 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2019 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள், கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீள்திருத்த பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெறலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவு
011-2784208
011-2784537
011-3188350
011-3140314
துரித இலக்கம்
1911
Add new comment