பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களையும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களையும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினதும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினதும் கண்காணிப்பின் கீழ், முப்படையினரின் உதவியுடன் தொற்றுநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னராக பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Add new comment