ஏழாவது தடவையாகவும் மக்களின் தெரிவாக டக்ளஸ்

ஈ.பி.டி.பி கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ​ேதவானந்தா 32,146 வாக்குகளை பெற்று 07 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தமது பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 07 ஆசனங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த. சித்தார்த்தன் ஆகியோர்   குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த 05 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 05 இலட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க 04 இலட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 05 இலட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...