மஹிந்த ராஜபக்‌ஷ ஞாயிறன்று பிரதமராக பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, நாளை மறுதினம் (09) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரையில் காலை 8.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நான்காவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராக பணியாற்ற  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...