இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு தரப்பினரிடையே சுமுக நிலை ஏற்பட்டவில்லை. கடந்த ஜூன் மாதம் இந்திய_ சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்தியா இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அப்போது ஆரம்பித்த பிரச்சினையானது தற்போது வர்த்தக ரீதியாகவும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

சீனா _இந்தியா இடையேதான் பிரச்சினை என்றில்லை. மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்து வரும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

லடாக்கில் ஆரம்பித்த இந்தப் பிரச்சினையானது இன்று வரையில் புகைந்து கொண்டேதான் உள்ளது. இந்தப் பிரச்சினையில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதாக கூறப்பட்டாலும், சீனா தரப்பில் எத்தனை பேர் என்பது வெளியாகவில்லை எனலாம். எனினும் அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின்படி, சீன வீரர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 என்றும் கூறப்படுகிறது. எனினும் சீன தரப்பில் இது குறித்ததான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியாவுக்கு ஆயுதங்களை அதிகளவில் விற்பனை செய்ய உள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்திய மாதங்களாக அமெரிக்கா இந்தியாவுக்கு புதிய ஆயுத விற்பனையின் அடித்தளத்தினை அமைத்துள்ளதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இதன் மூலம் நீண்ட கால ஆயுத அமைப்புகள் உட்பட அதிக அளவு தொழில்நுட்பம் மற்றும் அதி நவீன ஆயுதம், ட்ரோன்கள் என பலவும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற வெளிநாட்டு பங்காளிகளுக்கு இராணுவ டிரோன்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் விதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்விதமிருக்க மைக்ரோ​ெசாப்ட் ​ேகார்ப்பரேஷனின் டிக் டாக்கின் நடவடிக்கைகளை சீனாவின் அரசாங்கம் ஒரு போதும் ஏற்காது. விற்பனை கட்டாயப்படுத்தப்பட்டால் ​ேவாஷிங்டனுக்கு எதிராக நடவடிக்கையினை சீனா எடுக்கலாம் என்று 'சீனா டெய்லி' பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட, சீனாவின் பல செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய  ட்ரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக் டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோ​ெசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் மைக்ரோ​ெசாப்ட் நிறுவனம் இது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், தடை செய்யப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


Add new comment

Or log in with...