கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்

சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளை, கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கேசந்துறை முதல் மன்னார்,  கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் அதிகரித்துக் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

 


Add new comment

Or log in with...