- அதி விசேட வர்த்தமானி
9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடாத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து, மே 14ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் கொவிட்-19 பரவல் காரணமாக, ஓகஸ்ட் 05ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் தினம் தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய பாராளுமன்றம் கூடும் திகதி, ஓகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment