டோஹாவிலிருந்து 13 பேர் உள்ளிட்ட 14 பேர் நாடு திரும்பினர்

இன்று அதிகாலை 1.45 மணிக்கு, கட்டாரின் டோஹாவிலிருந்து கப்பல் பணியாளர்கள் உட்பட 13 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜப்பானின் நரீட்டாவிலிருந்து ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வருகை தந்த விமானப் பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...