Jaffna Got Talent 2020 நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ். தீபகற்பத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் வகையில் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நடன மற்றும் பாடல் கலைத்திறமையினை வெளிக்கொணரும் அரிய வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, Jaffna Got Talent நிகழ்வின் மாபெரும் இறுதிப் போட்டியானது நாளை (02) பிற்பகல் 3.30 மணியளவில், சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment