அமீரகத்திலிருந்து 335 பேர் நாடு திரும்பினர்

- கட்டாரிலிருந்து 14  பேர் வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு (31) வந்தடைந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்ததான EK 648 எனும் விமானத்தில், அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 14 பேர், இன்று (01) அதிகாலை 1.30 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவையின் QR 668 எனும் விமானத்தில் அவர்கள் வருகை தந்துள்ளனர்.


Add new comment

Or log in with...