பாராளுமன்றத்தில் பலம் மிக்க எதிர்க்கட்சி உருவாக்குவது அவசியம்

பாராளுமன்றத்தில் பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டுமானால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என அதன் தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

தேர்தலின் பின்னர் நாட்டின் பாராளுமன்றத்தில் மக்களுக்கு அசாதாரணத்தை ஏற்படுத்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க பலமிக்க எதிர்க்கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். அவ்வாறான பலமிக்க எதிர்க்கட்சியொன்றை ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாசவால் ஒருபோதும் உருவாக்க முடியாது என அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...