சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது

பொகவந்தலாவை, மோராவத்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (21) இக்கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாணிக்கக்கல் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இச்சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவையைச் சேர்ந்த 20, 27, 28 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (22) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...