Wednesday, July 15, 2020 - 10:38am
மெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) முற்பகல், குறித்த பகுதியில் மண் அகற்றும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மண்மேடு சரிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த இருவரும், மெணிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மெணிக்ஹின்ன, உடகம்மெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மெணிக்ஹின்ன பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment