ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அப்பல்கலைக்கழக நிர்வாகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பரீட்சையை நடத்தும்போது சமூக இடைவெளி தொடர்பாக எழும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ள அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன், கொரோனா வைரஸினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment