Tuesday, July 14, 2020 - 12:29pm
இலங்கைக்கு வர முடியாமல், ஜோர்தானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சுமார் 300 பேர், நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் இன்று (14) அதிகாலை 4.00 மணிக்கு, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 1506 எனும் விசேட விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையர்கள் 285 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானோர் ஜோர்தானில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்தகளாவர்.
இவ்விமானப் பயணிகள், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ ஆய்வுகூடத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Add new comment