பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2,025 பேர் கைது

கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2,025 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 410 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 838 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 235 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 169 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 03 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 360 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளின்போது ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 07 உம், சட்டவிரோத மதுபானம் 4,848 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...