கடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி

மொரட்டுவை,  லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (10) 11.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அங்குலான பொலிஸ் நிலைய அதிகாரிகளினால், திடீரென வீதித் தடை ஏற்படுத்தி வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, 02 முச்சக்கரவண்டிகளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய வேளையில், முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர்,  பொலிஸ் அதிகாரிகள் மீது கல்லினால் தாக்கி முறைகேடாக நடந்துகொண்டதோடு, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

மொரட்டுவையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...