அவுஸ்திரேலியாவிலிருந்து 229 பேர் நாடு திரும்பினர்

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 229 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம், மெல்பர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (11) பிற்பகல் வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த விமானப் பயணிகளில், தொழில்வாய்ப்புக் கருதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்களும், உயர் கல்வியைத் தொடர்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கை மாணவர்களும் அடங்குகின்றனர்.

இவ்விமானப் பயணிகள், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 600 எனும் விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 2.33 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ ஆய்வுகூடத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...