பிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை

கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 234 பேர் இன்று (11) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் அனைவரும், இலங்கை விமானப் படையினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...