ரஷ்யாவிலிருந்து 266 பேர் நாடு திரும்பினர்

ரஷ்யாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 266 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மஸ்கட் நகரிலிருந்து இன்று (10) பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ரஷ்யாவில் உயர் கல்வியை தொடர்வதற்காக புறப்பட்டுச் சென்றிருந்த மாணவர்களே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  


Add new comment

Or log in with...