வெல்லவாயவில் விபத்து; மூவர் பலி

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – புத்தல வீதியில், வருணகம பிரதேசத்தில் இன்று (10) காலை 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெல்லவாயவிலிருந்து புத்தல நோக்கி பயணித்த லொறியும், புத்தலவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட அதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து,  மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும் ஆண்கள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Add new comment

Or log in with...