கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து நேற்று (09) வெளியேறியுள்ளார்.
IDH வைத்தியசாலையில் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், PCR பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் தொற்று அவரது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 895ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Add new comment