Friday, July 10, 2020 - 9:30am
புத்தல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவ பெல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (09) பிற்பகல் 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வயல்வெளியில் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊவ பெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் புத்தல பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Add new comment