ஹெரோயினுடன் 3 பெண்கள் கைது

- தோட்டாக்கள், செய்மதி தொலைபேசி மீட்பு

ஹுங்கம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டஅத பிரதேசத்திலும் நிதஹஸ்கம பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நேற்று (08) மாலை 4.30 மணியளவில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47 கிராம் 5 மில்லிகிராம், 4 கிராம் 490 மில்லிகிராம், ஒரு கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு 09 மில்லிமீற்றர் வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் 02 உம், மெகசின் 01 உம், படகுகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் செய்மதித் தொலைபேசி 01 உம், கையடக்கத் தொலைபேசிகள் 04 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

பட்டஅத மற்றும் நிதஹஸ்கம பிரதேசங்களைச் சேர்ந்த 32, 28, 33 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (09) அகுணுகொலபெலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம், ஹுங்கம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


Add new comment

Or log in with...