முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் CIDயில்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் CIDயில்-Rishad Bathiudeen Appeared Before CID

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி, அரிசி இறக்குமதி தொடர்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் அவரிடமிருந்து CIDயினர் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.


Add new comment

Or log in with...