விமானப்படைக்கு 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய முடிவு

- ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை விமானப் படையினருக்கு 04 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச ஏலத்தின் மூலம் விமானப் படையினர் பயன்படுத்துவதற்கு 04 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தற்போது இலங்கை விமானப் படையினர் பயிற்சிக்காக பயன்படுத்தி வரும் 02 ஹெலிகொப்டர்களும், 1981ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதோடு, அவை பழமையானவை என்பதால், அவற்றிற்கு பதிலாக 04 ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இலங்கை விமானப்படையினர் ஐ.நா.அமைதி காக்கும் படையில் பணியாற்றி வருவதால், இந்த ஹெலிகொப்டர்கள் அவர்களின் பயிற்சிக்கு அவசியமாக உள்ளது எனவும், அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...