- இந்தியாவிலிருந்து 23 வியாபாரிகள் வருகை
- கட்டாரிலிருந்து 23 இலங்கையர்கள் வருகை
இலங்கையில் தொழில்வாய்ப்பில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜைகள் 153 பேர், இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய விமான சேவையின் AI 282 எனும் விசேட விமானத்தின் மூலம் இன்று (08) காலை 9.50 மணிக்கு அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு தொழில்வாய்ப்புகள் கருதி தங்கியிருந்த இந்திய பிரஜைகளே இவ்வாறு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை, இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து இலங்கைக்கு வியாபாரிகள் 23 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், இன்று அதிகாலை டோஹா நகரிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானத்தில், இலங்கையர்கள் 23 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
Add new comment