5 மாவட்டங்களில் புதிய பல்கலைகள்; பணிகள் ஆரம்பம்

ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழங்களை நிர்மாணிக்கவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்தார்.

இது தொடர்பான திட்டங்களை தயாரிப்பதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட 05 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழில் சந்தையின் அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கைநெறிகள் தயாரிக்கப்படவுள்ளன.  

அத்தோடு, பல்கலைக்கழக நிர்மாணத்திற்கான காணிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வருட இறுதிக்கு முன்னர் இப்பல்கலைக்கழங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...