விசாரணைக்கு ஆஜராகாத சிவாஜிலிங்கம் கைதாகி பின் பிணையில் விடுதலை

 

பிரபாகரனுக்கு பிறந்த நாள் கேக் வெட்டிய வழக்கு

நீதிமன்ற பிடியாணையின் கீழ் நேற்று (05) காலை கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில்  அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம்  நேற்று  அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எஸ்.தில்லைநாதன், யாழ்விசேட நிருபர்


Add new comment

Or log in with...